மாணவிக்கு பாலியல் தொல்லை! பாடகர் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பஜன் பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் தேர்வு எழுதுவதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்ற போது மாணவிக்கு இந்த பாலியல் தொல்லையை கொடுத்து இருக்கிறார் அந்த பாடகர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று 19 வயது கல்லூரி மாணவி தேர்வு எழுதுவதற்காக சென்று இருக்கிறார். இதற்காக அவர் போரிவலி ரயில் நிலையத்தில் சென்றிருந்து ரயிலுக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது போஜ்புரி ஆல்பங்களை பாடிய பஜன் பாடகர் தீபக் பூஜாரியால் அந்த மாணவியிடம் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். அந்த பெண்ணிடம் முகவரியை கேட்டிருக்கிறார். முகவரியை கேட்ட சாக்கில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டு உதவிக்கு எல்லோரையும் அழைத்து இருக்கிறார்.
அக்கம் பக்கத்தினர் அங்கிருந்த ஓடி வரவும் அந்த பாடகர் வேறு ஒரு ரயிலை பிடித்து தப்பி சென்றிருக்கிறார். இதன் பின்னர் மாணவி ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். பின்னர் விராரி கிராமத்தைச் சேர்ந்த பஜன் பாடகர் தீபக் பூஜாரியை கைது செய்துள்ளனர் ரயில்வே போலீசார்.