ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- டிக்கெட் பரிசோதகருக்கு சிறை

 
f

ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகரை சக பயணிகள் ஓடி வந்து பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 
 பெங்களூரு ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பணி நிமித்தமாக பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்.  இதற்காக அவர் கடந்த 13ஆம் தேதி அன்று ஹவுரா எஸ்.எம்.பி.டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.  மறுநாள் காலையில் அந்த ரயில் கே. ஆர். புரம் ரயில் நிலையத்தில் சிக்னல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்திருக்கிறது . 

h

அந்த ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து புறப்படுவதற்காக இளம்பெண் முடிவு செய்து இருக்கிறார்.  இதனால் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நடந்து சென்று இருக்கிறார்.  அப்போது அவரை நிறுத்திய டிக்கெட் பரிசோதகர் சந்தோஷ் குமார் என்கிற 42 வயது வாலிபர் இளம்பெண்ணிடம் டிக்கெட் கேட்டிருக்கிறார்.

 தனது செல்போனிலிருந்து டிக்கெட்டை காட்டியிருக்கிறார் இளம்பெண்.  அந்த நேரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார் டிக்கெட் சந்தோஷ் குமார் அந்தப் பெண்ணின் முகத்தில் பேனாவளி எழுத முயற்சித்திருக்கிறார் இதில் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கிறார்.

 இதைக் கேட்டு பயணிகள் ஓடி வந்து டிக்கெட் பரிசோதகரை பிடித்துள்ளனர்.  ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் தான் அந்த டிக்கெட் பரிசோதகர் மது போதைதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது . மது போதையில்  இளம்பண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது  வளர்ப்பு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  இது குறித்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.