மது குடிக்க பணம் தராததால் தாயை விரட்டி விரட்டி தீ வைத்து கொலை செய்த மகன்

 
murder

சங்கரன்கோவில் அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை விரட்டி விரட்டி தீ வைத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

snk2sankaranarayanan_2312chn_43_6

தென்காசி மாவட்டம் மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஞானமுத்து என்பவரது மனைவி ராமலட்சுமி (65). இவர்களது மகன் சங்கரநாராயணன் (43). இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் குடிப்பதற்காக அவரது தாய் ராமலட்சுமியிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும் , பணம் தர மறுத்ததால் மன்னனையை ஊற்றி தீ வைத்து கொழுத்த முயன்றுள்ளதாகவும் , இதனையடுத்து பதறி அடித்து தாய் ராமலட்சுமி நடுத்தெருவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தீ வைத்ததால் நடுத்தெருவில் தாய் ராமலட்சுமி தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். 

இதனையடுத்து  சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் தலைமையிலான கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு தாயை தீயிட்டு கொலை செய்த ராமலட்சுமியின் மகன் சங்கரநாராயணனை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மகனே தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தராததால் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி கொலை செய்வது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.