"மனைவி இல்லாத நேரத்துல வீட்டுக்கு வந்த மாணவியை .."ஒரு ப்ரொபசரிடம் சிக்கிய மாணவியின் கதி.
ஒரு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக காலேஜ் டீன் கைது செய்யப்பட்டார்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே திருச்சூரில்' நாடகம் மற்றும் நுண்கலை பள்ளி'யில் சுனில்குமார் என்பவர் டீனாக பணியாற்றி வந்தார் .அந்த டீனிடம் அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியொருவர் நன்றாக பழகி வந்தார் .இதனால் கொரானா காலத்தில் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டதால் அவர் அந்த டீன் சுனில்குமார் வீட்டுக்கு சென்று அவரிடம் படித்து வந்தார் .
இந்நிலையில் அந்த டீன் சுனில்குமாரின் மனைவி ஒரு நாள் ஊருக்கு போய் விட்டார் .அப்போது அந்த டீன் வீட்டில் அந்த முதலாம் ஆண்டு மாணவி தங்கி படித்தார் .அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த டீன் அந்த மாணவியை பலாத்காரம் செய்து விட்டார் .
பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டி வந்துள்ளார் .ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றார் .அந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், அந்த ப்ரொபெஸரை கைது செய்ய வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுனில்குமாரை முதலில் காலிகட் பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது.பின்னர் திங்கள்கிழமை, திருச்சூரில் உள்ள போலீசார் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.