மாணவி வயிற்று வலியால் அவதி! காதலன் போக்சோவில் கைது

 
g

வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார் ஒன்பதாம் வகுப்பு மாணவி. மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து அந்த மாணவியின் காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் வசித்து வரும் அந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் . தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் உள்ளார்.  இவரின் தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

gl

 கடந்த சில தினங்களாகவே அந்த மாணவி வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.  இதனால்  மகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரின் தாய் .  அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் மகளிடம் விசாரித்த போது காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  கூலிதொழிலாளியான 24 வயது இளைஞர் சுசீந்திரன் தான் இதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

 குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும் போது மாணவிக்கும் சுசீந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியிருக்கிறது.  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்  கூறி பழகி வந்த சுசீந்திரன்,  மாணவியை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  

இந்த உண்மையைச் சொல்லிவிட்டு தாயிடம் அழுது இருக்கிறார் அந்த சிறுமி . இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்தச் சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.