மீண்டும் மீண்டும் தீண்டும் ஆசிரியர் -பொறுக்க முடியாத பத்தாம் வகுப்பு மாணவி செஞ்ச விபரீதம்

 
rape


ஒரு ஆசிரியரின் மூணு வருட பாலியல் தொல்லையால் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார் .

widow rape by neigbour
தமிழகத்தின் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் ஒரு தனியார் மெட்ரிக் ஸ்கூல் உள்ளது .இங்கு ஒரு   17 வயது சிறுமி, பிளஸ்2 படித்து வருகிறார்.  அவர் படித்து வரும் அந்த பள்ளியில் கராத்தே மாஸ்டரான 46 வயது  ராஜா என்பவர் பணியாற்றி வந்தார் ,அவர் அந்த மாணவிக்கு கடந்த மூன்றாண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் .

இதனால் அவர் கையை அறுத்துக்கொண்டும் ,தூக்கு போட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் , கராத்தே மாஸ்டர் ராஜாவின்  பாலியல் தொந்தரவு குறித்து 9ம் வகுப்பு படிக்கும் போதே அந்த மாணவி தனது வகுப்பாசிரியர் மூலம் பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் புகாரளித்துள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் அவரது பாலியல் சீண்டல் அதிகரித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது.
மேலும் அந்த   கராத்தே ஆசிரியர் ராஜா, பள்ளியில் படிக்கும் பல மாணவிகளுக்கு, இதே போல் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.. பின்னர், ஸ்டீபன் தேவராஜ், ராஜா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.