"பள்ளிக்கூடம் போன பொண்ணுங்களை பாழாக்கிட்டாரே." -குதறிய வாத்தியாரால் கதறிய பெற்றோர்

 
rape


இரு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

rape
கர்நாடகா மாநிலம்   மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா ஸ்கூல் உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது .இந்த வகுப்புக்களில் பல மாணவியர் படித்து வருகின்றனர் .அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர் .அந்த பள்ளியின்  ஆசிரியர்  உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் தங்களுக்கு அந்த ஆசிரியர் மதானி மூலம் நடந்த பாலியல் கொடுமை பற்றி பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரிடம் புகாரளிக்க பயந்தனர் .அதனால் அவர்கள் தங்களின் பெற்றோரிடம் இது பற்றி அழுது கண்ணீருடன் கூறினார்கள் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த பெற்றோர் பள்ளியில் புகாரளித்தால் நியாயம் கிடைக்காது என்று அங்குள்ள போலீசில் புகார் கூறினர் 
 அந்த பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார் மகளிர் போலீசார் அந்த இரு மாணவியரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்   மதானியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .பின்னர் நீதிமன்ற  உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.
.