"சைன்ஸ் பாடம் நடத்தறேன்னு இப்டி செய்யுறீங்களே சார்.."-வாத்தியரிடம் சிக்கிய மாணவி.
ஒரு 11ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீஸ் கைது செய்தது
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 40 வயதான சைன்ஸ் வாத்தியார் அங்குள்ள 11ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்தார் .இந்நிலையில் அந்த மாணவிகளில் ஒரே ஒரு மாணவி மீது அந்த ஆசிரியருக்கு ஆசை பிறந்துள்ளது .இதனால் அந்த மாணவியை அடைய அவர் திட்டம் போட்டார் .
அதன் படி கடந்த டிசம்பர் 2ம் தேதி அந்த மாணவியை அவரின் பெற்றோருக்கு தெரியாமல் கல்வி சுற்றுலா செல்லாமல் என்றும், இதன் மூலம் சைன்ஸ் பாடத்தை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியுமன்றும் கூறி தன்னுடைய காரிலே கூட்டி சென்றார் .அவரை நம்பி அந்த மாணவியும் அவருடன் வீட்டுக்கு தெரியாமல் வந்தார் .அப்போது அந்த மாணவியை அவர் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .பிறகு அந்த மாணவியை அவரின் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார் .அதன் பிறகு அந்த மாணவி இது பற்றி தன் பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறினர் .போலிசார் வழக்கு பதிந்து அந்த ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்