"என்னோட ஆறு குழந்தைகளும் முழிச்சிக்கறதுக்குள்ள .. "-40 வயசு பெண்ணுக்கு 14 வயசு பையன் மீதான காதலால் வந்த வினை .
14 வயது சிறுவனை காதலித்த 40 வயதான பெண் ,அவரோடு ஓடிப்போனதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
குஜராத்தில் உள்ள வதேராவின் தஹோத் மாவட்டத்தின் ஃபதேபுரா தாலுகாவின் அம்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ,14 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் .இவரின் வீட்டருகே 40 வயது பெண் ஒருவர் தனது ஆறு குழந்தைகள் மற்றும் கணவரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவர்களுக்குள் திடீரென்று காதல் அரும்பியது .அந்த சிறுவன் அடிக்கடி அவரின் வீட்டுக்கு வந்ததால் வந்த கள்ள உறவு இது .இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அந்த சிறுவனின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது .இதனால் அவர்கள் இருவரும் அந்த ஊரை விட்டு ஓடி விட முடிவு செய்தனர் .
அவர்களின் திட்டப்படி அந்த பெண் தனது ஆறு குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு அந்த சிறுவனுடன் ஊரை விட்டு தப்பி சென்றுவிட்டார் .பிறகு அந்த சிறுவனின் பெற்றோர் அந்த பெண்ணிடம் இது பற்றி பேச்சு வார்த்தை நடத்தியும் அந்த பெண்ணையும் அந்த சிறுவனையும் பிரிக்க முடியவில்லை .
இதனால் கோபமுற்ற அவரது குடும்பத்தினர் காவல்துறையை அணுகியுள்ளனர். போலீசார் அவர்களின் புகாரை கேட்டு திகைப்புற்று ,வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் . அப்போது அந்த சிறுவனின் ஆதார் கார்டின்படி 14 வயது என்றும் ,ஆனால் வயது குறைத்து காமிக்க பட்டுள்ளதை போலீசார் கண்டு பிடித்தனர் .