"அபார்ஷனுக்கப்புறமும் என்னை நல்லா அனுபவிச்சியேடா.." -காதலியை கர்ப்பமாக்கிய காதலனுக்கு நேர்ந்த கதி .

 
love

காதலியிடம் ஜாலியாக இருந்து விட்டு ,கருவை கலைத்து விட்டு கல்யாணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனுக்கு பத்து ஆண்டு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது .

arrest

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ்செருவாயை சேர்ந்த27 வயதான  பிரதாப்  என்ஜினீயரிங் படித்துவிட்டு வெட்டியாக வீட்டில் இருந்துள்ளார் . இவருக்கு  டி.இளமங்கலத்தில் உள்ள 26 வயதுடைய இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டது .அதன் பிறகு அவர் அந்த பெண்ணிடம்  பலமுறை உல்லாசம் அனுபவித்ததால் அவர் கர்ப்பமானார் .அதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்து கரு கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்து விட்டு ,மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபவித்தார் .
பின்னர் அந்த பெண் அவரிடம் திருமணம் செய்ய கேட்டதற்கு அந்த நபர் மறுத்துவிட்டு அவரின் உறவினை துண்டித்து விட்டார் இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த காதலன் மீது அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் வழக்கு  நடைபெற்று வந்தது  .அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்தது  .அந்த தீர்ப்பில் அந்த நபருக்கு பத்து ஆண்டு ஜெயில் தண்டனையும் 50000 ரூபாய்  அபராதமும் விதிக்கப்பட்டது .