ப்ரிட்ஜில் இளம்பெண் உடல்! காதலனின் தந்தையும், நண்பர்களும் சிக்கினர்

 
p

 திருமணம் செய்து கொள்ளாமல் லீவ் இன் உறவில் வாழ்ந்து வந்த போது காதலி ஸ்ரத்தாவை கொன்று 35  துண்டுகளாக வெட்டி பிரிஜ்ஜுக்குள் வைத்திருந்து எலும்புகளை கிரைண்டர் மிஷினில் போட்டு அரைத்து பிரிட்ஜ்ஜில் வைத்திருந்த உடல் பாகங்களை அவ்வப்போது எடுத்துச் சென்று வெளியே அகற்றிய கொலை வழக்கில் காதலன் அப்தாப் போலவே டெல்லியில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.  

 லிவ் இன்  முறையில் வாழ்ந்து வந்த இளம் பெண் நிக்கியுடன் வாழ்ந்து வந்த சாகில் அந்த பெண்ணை கொன்று ஃப்ரிஜ்ஜில் மறைத்து வைத்திருந்த போது போலீசில் பிடிபட்டிருக்கிறார்.   அவருக்கு உடந்தையாக இருந்த அவர் தந்தை உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 டெல்லியில் நஜாப் கார் நகரில் மித்ராவன் கிராம புறத்தின் சாலையோர பகுதியில் உணவு விடுதி அமைந்திருக்கிறது.  அந்த உணவு விடுதியில் உள்ள ப்ரிஜ்ஜில் 25 மதிப்புடைய பெண்ணின் சடலம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் சென்றிருக்கிறது.   போலீசார் விரைந்து வந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அந்த இளம் பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

sh

 போலீசாரின் விசாரணையில் இந்த இளம் பெண் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நிக்கி யாதவ் என்பது தெரிய வந்தது.  இவர் ஷாஹில் கெலால் என்ற இளைஞருடன் லீவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.   கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நொய்டா நகரில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதும்,  இந்த திருமணத்தை தெரிந்து கொண்ட சாகிலின் குடும்பத்தினர் கடும்  எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது .

கிராமத்தில் வசிக்கும் உணவு விடுதி உரிமையாளரான சாகில் இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் நிக்கி யாதவ உடன் லின் இன்  உறவில் இருந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   லின் இன் முறையில் இருந்து கொண்டே குடும்பத்தினர் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார் .  இதை அறிந்த நிக்கி தன்னை திருமணம் செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.   இதனால் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி நிக்கி யாதவை கொலை செய்திருக்கிறார். 

 பின்னர் உடலை காரில் கொண்டு சென்று உணவு விடுதியில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்திருக்கிறார்.   கடந்த ஒன்பதாம் தேதி இருவரும் சந்தித்து பேசி இருக்கும் நிலையில் பத்தாம் தேதி காலையில் காரில் வைத்து கொன்றிருக்கிறார்.  இதன் பின்னர்  நிக்கி- சாகில் இருவருக்கும் இடையே நடந்த திருமண சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றி உள்ளார்கள் .  உடலை வைப்பதற்காக நண்பர், உறவினர்கள் உதவி இருக்கிறார்கள். 

சாகிலுக்கு  உதவியதாக அவரது தந்தை வீரேந்திர சிங், ஆசிஸ், நவீன் ஆகிய உறவினர்களும் நண்பர்கள் அமர் ,லோகேஷ் என்று  ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .  நிக்கியை கொலை செய்த பின்னர் எதுவுமே நடக்காது போல் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார் சாகில். 

 டெல்லியில்  லின் இன் முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்டதால் அவரைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி வீசினார். அதே போல் டெல்லியில் லின் உறவில் இருந்த பெண்ணை கொன்று பிரிஜ்ஜுக்குள் வைத்திருந்துள்ளார் ஷாகில்.  இது டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.