நடுரோட்டில் சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற வாலிபர்! வைரலான வீடியோவால் போலீசார் அதிரடி

 
ச்

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு தன் மளிகை கடைக்கு வருவதையும் நிறுத்தி விட்டதால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் 16 வயது சிறுமியை வீடு புகுந்து அடித்து கத்தியை காட்டி மிரட்டி தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டு நடுரோட்டில் தரதரவென்று இழுத்துச் செல்கிறார்.  இது குறித்த வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்துள்ளனர் .

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் பகுதியில் ஓம்கார் திவாரி என்கிற 47 வயது வாலிபர் மளிகை கடை நடத்தி வருகிறார்.  அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி இவரது மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்.  

ட்

 அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த சிறுமியிடம் ஓம்கார் திவாரி கேட்டு வந்திருக்கிறார்.  அந்த சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  ஒரு கட்டத்திற்கு மேல் ஓம்கார் திவாரியின் தொல்லை அதிகரிக்கவே, அந்த மளிகை கடைக்கு போவதையே நிறுத்தி இருக்கிறார் சிறுமி .  இதனால் ஆத்திரமடைந்த ஓம்கார் திவாரி மது அருந்தி கொண்டு போதையில் அந்த சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்.

 கத்தியை உடன் சென்று இருக்கிறார்.   கத்தியால் சிறுமியின் கழுத்தில் சீவி இருக்கிறார்.  இதில்  அலறி துடித்த சிறுமி காயத்துடன் அங்கிருந்து தப்பி சாலையில் ஓடி இருக்கிறார்.   விடாமல் பின்னால் துரத்திச் சென்ற ஓம்கார் திவாரி அந்த சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றிருக்கிறார்.   இதில் சிறுமி தடுமாறி விழுந்து மயங்கி இருக்கிறார். 

  சாலையில் சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.   இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.  அந்த வீடியோ வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  சம்பவம் நடந்த இடத்தில் சென்று விசாரித்து ஓம்கார் திவாரியை கைது செய்துள்ளனர்.