கஞ்சா போதையில் இளம்பெண்ணை கிண்டல் செய்த சிறுவன் - தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி

 
c

கடைக்குச் செல்லும் போது கஞ்சா போதையில் இருந்த சிறுவன் அந்த பெண்ணை கிண்டல் செய்து இருக்கிறார்.  அவரின் கணவர் வந்து இதை தட்டி கேட்டதால் கத்தியால் குத்தி  கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறான் அந்த சிறுவன்.  அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசம் மணலூர் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார்.  இவர் செங்கல் சூளை தொழிலாளி.  இவரது மனைவி சித்ரா. இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

g

 நேற்று மாலையில் சித்ரா, தான் வசித்து  வந்த அதே பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் சித்ராவை கிண்டல் செய்து இருக்கிறான்.   சித்ரா வீடு வந்ததும்  கணவர் விஜயகுமாரிடம் இதைச்சொல்லி இருக்கிறார்.  அதை கேட்டதும் ஆத்திரமடைந்த விஜயகுமார் சிறுவனிடம் சென்று எதற்கு என் மனைவியை கிண்டால் செய்தாய் என்று தட்டிக் கேட்டு இருக்கிறார் . அவனை கத்தியாலும்  கழுத்தில் கீறி மிரட்டி இருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததால் தன் வீட்டுக்குள் ஓடி அங்கிருந்து கத்தி எடுத்து வந்து விஜயகுமாரை கழுத்தில் குத்தி இருக்கிறார்.  ரத்த வெள்ளத்தில்  விழுந்து மயங்கி கிடந்திருக்கிறார்  விஜயகுமார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் . அங்கு விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இதை அடுத்து  சம்பவம் குறித்து அறிந்து நேரில் வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.