கஞ்சா போதையில் தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்

 
ப்

 கஞ்சா போதையில் சொந்த அண்ணனே தங்கையை வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

 ராமநாதபுரத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் வசித்துவம் செல்வத்திற்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.  கஞ்சாவிற்கு  அடிமையான மகன் சரண் அவ்வப்போது வீட்டில் யாரிடமாவது தகராறில் ஈடுபட்டு வருவதாக வழக்கம் என்று கூறப்படுகிறது.

க்

 இந்த நிலையில் கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார் சரண்.  அப்போது  தங்கை சுவாதி சரணை கண்டித்திருக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கஞ்சா போதையில்  தங்கை என்றும் பார்க்காமல் அவரை வெட்டி படுகொலை செய்து இருக்கிறார்.  வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

 வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய போது மகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறியிருக்கிறார்கள்.  இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

 கொலை செய்துவிட்டு பின்னர் தப்பி ஓடிய அண்ணன் சரணை போலீசார் தேடி வருகின்றனர்.