செல்போனில் பேசியது யாரென்று சொல்லாததால் தங்கையின் கழுத்தை நெரித்து கொன்ற அண்ணன்

 
palani

நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தும் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது யாரென சொல்லாததால் ஆத்திரமடைந்து தங்கையின்  குரல்வளையை நெரித்து கொலை செய்திருக்கிறார் அண்ணன்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 பழனி கணபதி நகரை சேர்ந்தவர்கள் முருகேசன்- சங்கிலி அம்மாள் தம்பதி.   இவர்களுக்கு கார்த்தி என்கிற ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் காலமாகிவிட்டார்.  மகன் கார்த்தி தான் கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

 இந்த நிலையில் முருகேசனின் 16 வயது மகள் பெரியம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.   அங்கே நீண்ட நேரம் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.   இதனை பார்த்த பெரியப்பா மகன்,   யாருடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். 

gh

 அதற்கு சிறுமி சரியான பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார்.   இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   அந்த சிறுமி யாருடன் பேசினேன் என்பதை சரியாக சொல்லாததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலமுருகன் சிறுமியை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

 அப்போது சிறுமி எதிர்த்து பேசவே அவரின் குரல்வளையை நெரித்து இருக்கிறார்.   இதில் சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்து இருக்கிறார்.   இதனால் பதறிப்போன பாலமுருகன்,   பழனி அரசு மனதிற்கு கொண்டுபோய் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.   அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார்.

 இதன் பின்னர் பழனி நகர போலீசாருக்கு தகவல் தெரியவர,   அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் பாலமுருகன் தான் என்பது தெரிந்ததும் அவரை கைது செய்துள்ளனர்.   மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.