காதலியை 20 முறை கத்தியால் குத்தி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரன்! வேடிக்கை பார்த்து சென்ற மக்கள்

 
k

 காதலியை 20 முறைக்கு மேல் கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறான் அந்த காதலன்.  அப்படியும் ஆத்திரம் தீராமல் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த சிறுமியின் தலையின் மீது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறான்.   16 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமையை அப்பகுதியாகச் சென்ற பொதுமக்கள் எவரும் தடுக்க முன்வரவில்லை என்பதுதான் பெரும் அவலம்.

 டெல்லியில் ஷாபாத் டெய்ரி என்கிற பகுதியில் வசித்து வந்தவர் அந்த சிறுமி .  அதே பகுதியில் 20 வயது இளைஞர் ஷாகிலும் வசித்து வந்திருக்கிறார்.  இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகியவர்கள்.  பின்னர் காதலர்களாக மாறி இருக்கிறார்கள்.   இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது . 

kn

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நண்பரின் மகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார் அந்த சிறுமி.  இதை தெரிந்து கொண்டு அந்த சிறுமியை பின் தொடந்து சென்ற சாகில் அவரிடம் பேச, அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்க,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஷாகில்,   முன்கூட்டியே திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியை குத்தி இருக்கிறார்.  இதில் அவர் அலறி துடித்து இருக்கிறார்.  தொடர்ந்து விடாமல் 20 முறைக்கு மேல் சரமாரியாக குத்தி இருக்கிறார்.  இதில் மயக்கம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந் திருக்கிறார் அந்த சிறுமி.   அப்படியும் ஆத்திரம் தீராத ஷாகில் அப்பகுதியில் கடந்த கல்லை தூக்கி வந்து அந்த சிறுமியின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறான்.

இத்தனை கொடூரத்தையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்துச் சென்று இருக்கிறார்கள் .  சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர்,  அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வந்தனர்.    அதற்குள் சிறுமியை கொடூரமாக கொலை செய்யும் அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

 தேடுதல் வேட்டை நடத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சாகர் என்கிற பகுதியில் தலைமறைவாக இருந்த இளைஞர் ஷாகிலை கைது செய்துள்ளனர்.