டிவி வால்யூமை அதிகமாக வைத்துவிட்டு சுத்தியலால் மனைவி, குழந்தைகளை சரமாரியாக அடித்த கொடூரன்

 
சு


அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக டிவி வால்யூமை அதிகரித்துவிட்டு சுத்தியல் எடுத்து மனைவி மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் ஒரு சிறுவன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.  

 கர்நாடக மாநிலத்தில் தார்வார் மாவட்டம் சுள்ளா கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கீரப்பா.  38 வயதான இந்த விவசாயி மனைவி முதகவ்வா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார் குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

ஃப்

இதனால் நிம்மதி இல்லாமல் மன உளைச்சலில் இருந்த பக்கீரப்பா மனைவி குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.  அதன்படி சம்பவத்தன்று நேற்று அதிகாலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கடும் ஆத்திரம் அடைந்த பக்கீரப்பா  அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக டிவி வால்யூமை அதிகமாக வைத்து விட்டு,  சுத்தியல் எடுத்து மனைவி குழந்தைகளை கொடூரமாக தாக்கி இருக்கிறார். 

 அவர்கள் போட்டு அலற சத்தம் டிவி சத்தம் அதிகமாக இருந்ததால் வெளியே கேட்கவில்லை.   இந்த தாக்குதலில் சிரியாஸ் என்கிற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   மற்ற நாடு மூன்று பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்கள்.  வழக்கத்தை விடவும் டிவி சத்தம் அதிகமாக இருந்ததால் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பக்கீரப்பா தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார்.  அதன் பின்னர் வீட்டிற்குள் முதகவ்வாவும்  மூன்று  குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள். 

போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசார் வந்து  அனைவரையும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள்.   பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.  மேலும் 3 பேருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.