காதலனிடம் தனது ஆபாச படங்களை கொடுத்த சிறுமிக்கு நேர்ந்த கதி
ஆசையாக கேட்டார் என்பதற்காக தனது ஆபாச படங்களை அனுப்பி வைத்த சிறுமிக்கு அந்த கதி ஏற்பட்டிருக்கிறது. காதலன் என்று நம்பி அனுப்பிய சிறுமியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார் அந்த இளைஞர் . போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கி இருக்கிறார் அந்த இளைஞர்.
கேரள மாநிலத்தில் பள்ளித் தோட்டம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் எபின்பால். 22 வயதான இந்த இளைஞர் துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் காதலிப்பதாக சொல்லி அந்த சிறுமியை ஏமாற்றி வந்திருக்கிறார்.
தனது நிர்வாண படங்களை பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞன் அந்த சிறுமியிடம் சொல்ல காதலன் ஆசையாக கேட்கிறார் என்று ஆபாசமாக படம் எடுத்து அந்த புகைப்படங்களை காதலனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த இளைஞர் அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார் .
இது தெரிய வந்ததும் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து எபின்பால் மீண்டும் துபாய்க்கு வேலைக்காக சென்று விட்டார். அதை அடுத்து போலீசார் எவின் பாலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அப்போது கொல்லம் போலீசார் எபின்பால் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை கொல்லத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தி உள்ளார்கள். நீதிபதியின் உத்தரவை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.