மகளை கொன்று சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய தந்தை

 
u

மகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் கழுத்தை நெரித்துக் கொன்று சாக்கு முட்டையில் கட்டி ஆற்றில் வீசி இருக்கிறார் கொடூர தந்தை . போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.  காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கெடிம்பூர் மதியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

m

 இதற்கிடையில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று சோட்டி கந்தக் ஆற்றில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது.  போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  பிரேத பரிசோதனையில் கர்ப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது. இதை அடுத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை  அடுத்து பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

 அப்போது,  தன் மகள் ஒரு இளைஞர் உடன் தொடர்பு வைத்திருக்கிறார்.  அதனால் கர்ப்பமாக இருக்கிறார் என்று ஒருவர் சொல்ல இதைக் கேட்டு மனமடைந்த நவ்ஷாத் தன் மகளை  கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்கு பையில் கட்டி,  சோட்டி கந்தக் ஆற்றில் வீசி வந்தது தெரிய வந்திருக்கிறது.    அதன் பின்னர் வீட்டிற்கு வந்ததும் மகள் காணாமல் போய்விட்டதாக நாடக மாடியதும் தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து நவ்ஷாத் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.