பாலுக்கு அழுத குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற தந்தை

 
c

 மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் பாலுக்கு அழுத 14 மாத பெண் குழந்தையை விஷம் வைத்து கொலை செய்துள்ளார் தந்தை.  திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் கிழக்கு பதனவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.  இவரது மனைவி சத்யா. தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் . டிராக்டர் வைத்து விவசாய பணிகளை செய்து வருபவர் சிவக்குமார்.

ப்

சிவகுமாருக்கும் அவரது மனைவி சத்யாவுக்கும் இடையே கடன் பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  நேற்று முன் தினம் இருவருக்கும் வழக்கும் போல் தகராறு ஏற்பட்டிருக்கிறது.  அப்போது ஆத்திரத்தில் மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீடு ஜல்லியூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார் சத்தியா.

 வீட்டில் இருந்த 14 மாத பெண் குழந்தை பசியால் அழுது இருக்கிறது.  குழந்தையை  சமாதானம் செய்ய முடியாது சிவகுமார் விஷத்தை கலந்து கொடுத்து இருக்கிறார்.  அதன் பின்னர் சாப்பாட்டில் விஷம் கலந்து தானும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது குழந்தைக்கும் கொடுத்திருக்கிறார்.   அந்த குழந்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுக்கவே பயந்து போய் தனது அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறில் இரண்டு குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டேன். நானும் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் .

அவர் விரைந்து வந்து மூன்று பேரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார் .  அன்று பரிசோதித்த மருத்துவர்கள் 14 மாத குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  மற்ற இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் 14 மாத பெண் குழந்தைக்கு விசம் கொடுத்து தந்தை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.