கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன காதலி.. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 3வது கணவன்..

 
தீ வைப்பு
 

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி  தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேந்தவர் சுதா(40).  இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாமல் போனது. இதனால்  முதல் திருமணம்  விவாகரத்தில் முடிந்துள்ளது.  அதன் பின்னர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன.  அதன்பின்னர்  அவரும் சுதாவை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த சுதாவுக்கு,  உடன் வேலை செய்யும் ஓட்டேரியை சேர்ந்த சௌந்தரராஜனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால்  சௌந்தரராஜனுக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.  

இதனிடையே   ஆவடி அடுத்த அண்ணனுரில் தனியாக வீடு எடுத்து ஓராண்டுக்கும் மேலாக குடும்பம் நடத்தி வந்த நிலையில்,  இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா , கொள்ளுமேட்டில் உள்ள  தனது அம்மா வீட்டிற்கே சென்றுள்ளார்.   சௌந்தரராஜனுடனான செல்போன் தொடர்பையும் அவர்   துண்டித்திருக்கிறார்.  இதனால் சுதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்காக, கொள்ளுமேடு பகுதிக்கே சென்றிருக்கிறார்.  அப்போது குழந்தையுடன் கடைக்கு சென்றிருந்த சுதாவை,  சௌந்தரராஜன் ஆட்டோவில் பின்தொடர்ந்தபடியே தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளார்.  

அதற்கு சுதா மறுப்பு தெரிவித்ததால்  ஆத்திரமடைந்த சௌந்தரராஜன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சுதாவின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சுதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு  வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசா, ர் 50% தீ காயங்களுடன் இருந்த சுதாவை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார்,  2 தனிப்படைகள் அமைத்து சௌந்தரராஜனை தேடி வருகின்றனர்.