டிபன் தர மறுத்த மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்

 
m


இரவு டிபன் கொடுக்காததால் ஆத்திரத்தில் இரும்புராடால் அடித்து மனைவியை துடிதுடிக்க கொலை செய்திருக்கிறார் கணவர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.  65 வயதான இந்த முதியவரின் மனைவி ஜோதி.   முதியவர் ரவி செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் அற்ற மாற்றுத்திறனாளி ஆவார் .  கடந்த ஐந்து வருடங்களாக இவர் மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.

c

 இந்த நிலையில் தான் சம்பவத்தன்று இரவில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது .  இந்த தகராறில் ரவியை அவரின் மனைவி தாக்கி இருக்கிறார்.   அது மட்டுமல்லாமல் இரவு டிபன் வழங்க முடியாது என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்று இருக்கிறார்.   இதில் கடும் ஆத்திரமடைந்த ரவி தூங்கிக் கொண்டிருந்த மனைவியை திரும்பு ராடால் அடித்து துடி துடிக்க கொலை செய்திருக்கிறார்.

 தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மூதாட்டியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மனநலம் பாதித்த மாற்று திறனாளி ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.