செயற்கை முறையிலும் கர்ப்பம் தரிக்காததால் மனைவியின் மண்டையை ரெண்டாக பிளந்த கணவர்

 
a

திருமணம் ஆகி 12 ஆண்டுகளாகியும் பிள்ளை பிறக்காததால்,  செயற்கை முறையிலும் கர்ப்பம் தரிக்காததால் கட்டையால் மனைவியின் மண்டையை அடித்து உடைத்து இரண்டாக பிளந்து கொலை செய்திருக்கிறார் கணவர்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம் .

அமர்நாத் பகுதியில் வசித்து வருபவர் ரோகித் ராஜ்.  அதே பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பிட்டர் பணியில் இருந்து வருகிறார்.  இவரின் மனைவி நித்துக்குமாரி.   இந்த தம்பதிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டில் திருமணம் நடந்திருக்கிறது .  திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகியும் நீத்து குமாரிக்கு குழந்தை வரம் இல்லாமல் இருந்திருக்கிறது.   இதனால் ரோனித் ராஜ் மனைவிக்கு செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க முயற்சித்து இருக்கிறார்.  

m

 இதற்காக செயற்கையாக கர்ப்பம் தரிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளித்து வந்திருக்கிறார்.  ஆனால் அவர்களின் துரதிர்ஷ்டம் செயற்கையாகவும் கர்ப்பம் தரிக்காமல் போயிருக்கிறது.   இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்து வந்திருக்கிறது .

இந்த நிலையில்,  கடந்த 22 ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருக்கிறார் ரோகித்ராஜ்.  அப்போது குழந்தை தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.  இதில் வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரும் சண்டையாக மாறி இருக்கிறது .  ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து ரோனித் ராஜ் வீட்டில் கிடந்த பெரிய கட்டையை எடுத்து வந்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் .  இதில் மண்டை உடைந்து இரண்டாக பிளந்து கீழே விழுந்து இருக்கிறார் நீத்துக்குமாரி.

 ரத்த வெள்ளத்தில் மண்டை இரண்டாக பிளந்து கீழே விழுந்து கிடந்த மனைவியை பார்த்ததும் இறந்து விட்டார் என்று அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.  உயிருக்கு போராடி துடிதுடித்துக் கொண்டிருந்த நீத்துகுமாரி சிறிது நேரத்தில் உயிரிழந்திருக்கிறார் . அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்த ரோனித் ராஜ் தன் மனைவியை யாரோ அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள் என்று சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் இடையே நாடகமாடி இருக்கிறார்.  இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீத்து குமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

 கொலையாளி குறித்து போலீசார் அப்பகுதியினர் இடையே விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.   விசாரணை நடத்திய போது வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ வந்து தன் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருப்பதாக கூறி இருக்கிறார் . அவரின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததால் அவரிடம் துருவித் துருவி போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதை ஒத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.