பழைய காதலனுடன் பழக முடியாத ஆத்திரம்! கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

 
gl

பழைய காதலனுடன் பழக முடியாத ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மாதிரி நாடகம் ஆடி இருக்கிறார் மனைவி.  இந்த நாடகம் அம்பலமானதும் அவரும் கள்ளக்காதலனும்  இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே சுந்தர்ராஜபுரம் கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் யுவராஜ்.   29 வயதான இந்த வாலிபர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.  இவரது மனைவி திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

 யுவராஜ் உறவினர் மகள் தான் காயத்ரி.   25 வயதான இளம் பெண் காயத்ரிக்கும் யுவராஜுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.  தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.  நேற்று முன்தினம் காலையில் தன் கணவர் யுவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி கதறி அழுது இருக்கிறார் காயத்ரி. 

x

 ஆனால் யுவராஜ்  தந்தை ஆறுமுகம் தன் மகனின் சாவில் மர்மம் உள்ளது என்று ஆர்கே பேட்டை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் காயத்ரியின் மேல் போலிசாருக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.  அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 சென்னையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்த காயத்ரி அங்கு பணியாற்றி வந்த திருத்தணி அகோர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை காதலித்து வைத்திருக்கிறார்.   இந்த காதல் விஷயத்துக்கு காயத்ரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.   அதனால் அவசர அவசரமாக காயத்ரியின் மாமன் மகன் யுவராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள் .

திருமணத்திற்கு பின்னர் திருத்தணியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலைக்கு சென்று வந்திருக்கிறார் காயத்ரி.   அதே மருத்துவமனையில் தான் பழைய காதலன் சீனிவாசனும் வேலை செய்து வந்திருக்கிறார்.   இதனால் இருவரும் மீண்டும் பழகி அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.  இந்த விவகாரம் தெரிந்ததும் மனைவி காயத்ரியை வேலையை விட்டு நிறுத்தி இருக்கிறார் யுவராஜ் .  இதனால் காயத்ரியையும் சீனிவாசனையும் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.  

 இதை அடுத்து இருவரும் செல்போனில் பேசிக்கொண்ட போது யுவராஜ்-ஐ தீர்த்து கட்டினால் தான் நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் யுவராஜ் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது சீனிவாசன் தனது நண்பர்கள் மணிகண்டன், ஹேமநாத் ஆகியோருடன் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் .  அப்போது  எல்லோரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள் . பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செட்டப் செய்து இருக்கிறார்கள். 

 இந்த உண்மைகள் தெரிய வந்ததும் காயத்ரியை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சீனிவாசன் ,மணிகண்டன்,ஹேம்நாத்  ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர் . நான்கு பேரையும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.