2ஆவது திருமணம் செய்ததால் தந்தையை கொன்ற மகன்! 4 பேர் கவலைக்கிடம்

 
m

முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்துள்ளார். இரண்டாவது மனைவி உள்பட மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

 கேரள மாநிலத்தில் திருச்சூரை சேர்ந்தவர் சுசீந்திரன்.  இவரின் மனைவி பிந்து.   இத்தம்பதியின் மகன் மயூர்நாத்  ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.  பிந்து அண்மையில் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .  அவர் இறந்து ஒரு வருடத்திற்குள்ளேயே கீதா என்கிற 45 வயது பெண்ணை சுசீந்திரன் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் . 

my

இது மயூர்நாத்துக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது.  தன் தாய் இறந்த ஒரு வருடத்திற்குள்ளே தன் தந்தை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்திருக்கிறார்.  இதனால்  தந்தையை எப்படியும் கொன்று விட வேண்டும் என்கிற முடிவில் எலி விஷம் வாங்கி காலை உணவில் கலந்து கொடுத்து இருக்கிறார் . 

இதை சாப்பிட்ட சுசீந்திரன்,  இரண்டாவது மனைவி கீதா,  பாட்டி,   வீட்டில் தேங்காய் பறிக்க வந்த ஸ்ரீ ராமச்சந்திரன்,   ஆகிய ஐந்து பேரும் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அங்கு சிகிச்சை பெற்று வந்த சுசீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.   மற்ற நான்கு பேரும் கவலைக்கிடமாக உள்ளனர்.

 இதை அடுத்து போலீசார் மயூர்நாத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.