காதலனிடம் ஆசிட் கொடுத்து தன் மீது வீசச்சொல்லி நாடகமாடிய பெண்

 
k

 கடனிலிருந்து தப்பிப்பதற்காக கள்ளக்காதலனிடம் ஆசிட் கொடுத்து தன் மீது வீசச் சொல்லி நாடகமாகிய பெண் பிடிபட்டிருக்கிறார்.  கள்ளக்காதலுடன் சேர்ந்து அவரது சகாக்களும் போலீசில் பிடிபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாடத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் லதா.  இவர் சித்திரன்கோடு அடுத்த பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.  கடந்த 31ஆம் தேதி அன்று தனது ஆலையிலிருந்து புண்ணியூர் கோணம் பகுதியில் பேருந்தில் இருந்து வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது பைக்கில் வந்த  ரெண்டு பேர் லதா மீது ஆசிட் வீசி விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

x

 இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த லதா தன்னைக் காப்பாற்றும் படி சத்தம் போட்டு இருக்கிறார்.  அலறி துடித்து இருக்கிறார்.  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லதாவை மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  சம்பவம் குறித்து அறிந்த குலசேகரம் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்ததில்,  மர்ம நபர்கள் பிடிக்க தேடி வந்த நிலையில்,  லதா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதாவிடம் போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திய போது 35 லட்சம் ரூபாய் தனக்கு கடன் இருக்கிறது.  அந்த கடன் வழங்கியவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் கள்ளக்காதலன் கிருபாதாஸ் மூலமாக ஆசீட் வீசச்சொல்லி நடக்கமாடினேன் என்பதை கூறியிருக்கிறார்.

 இதை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அப்பெண்ணின் கள்ளக்காதலன் கிருபாதாஸ்  மற்றும் அவருக்கு  அவருக்கு  உதவிய மூன்று நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.