கணவனின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு சாலையில் சென்ற பெண்
வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்று போலீசிடம் ஒப்படைத்த மனைவியின் செயல் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவிசந்ச் சூரி. இவரது மனைவி வசுந்தரா. தம்பதிக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகியிருக்கின்றன . இத்தம்பதிக்கு மனநிலை சரியில்லாத ஒரு மகன் உள்ளார்.
இந்த சூழ்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார் ரவிசந்த் சூரி. இதை அறிந்த வசுந்தரா கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். அந்த தொடர்பை விட்டு விடும்படி எச்சரித்திருக்கிறார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டிடுகிறது.
இந்த நிலையில் நேற்று கணவன் கள்ளத்தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதில் வாக்குவாதம் முற்றி அடித்திருக்கிறார் வசுந்தரா . அதில் மயங்கி விழுந்தபோது கழுத்தில் வெட்டி பலமுறை கொலை செய்திருக்கிறார். பின்னர் தலையை கையில் வைத்துக்கொண்டு போலீசில் ஒப்படைக்க சாலையில் நடந்து நேரில் சென்று ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளார்.
கணவன் தலையுடன் சாலையில் மனைவி நடந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.