நடிகைக்கு சுய இன்ப வீடியோ அனுப்பிய இளைஞர் -அதையும் வெளியிட்டு அசிங்கப்படுத்திய..

 
aன்

ஒரு சிறுகதை என்ற தலைப்பில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை அஞ்சல் அகர்வால்.  

 விளையாட்டு வீராங்கனையும்,  நகைச்சுவை நடிகையுமாணவர் அஞ்சல் அகர்வால்.  இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.  இவருக்கு இளைஞர் ஒருவர் தனது சுய இன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியிருக்கிறார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த அஞ்சல் அகர்வால்,  சம்பந்தப்பட்டவரை அம்பலப்படுத்தி இருக்கிறார்.  ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அஞ்

 அந்த நபரின் அருவருக்கத்தக்க வீடியோவை தனது  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதனால் அஞ்சல் அகர்வால்  இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர்,  அந்த வீடியோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பின்னர் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

 அவர் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  இதை போலீசார் பாதிக்கப்பட்ட அஞ்சல் அகர்வாலிடம் சொல்ல,  அவர் என்னிடத்தில் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அஞ்சல் அகர்வால் சொல்ல, போலீசார் இதை குற்றம்சாட்டப்பட்டவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.  அவர் உடனே மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அன்

 குற்றம்சாட்டப்பட்டவர் முகமூடியை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு வீடியோவில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த வீடியோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பிய நண்பரின் செயலையும், விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாரின் செயலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சல் அகர்வால்.