வாலிபரின் மடியில் வசதியாக படுத்துக்கொள்ள.. இளம்பெண்ணுக்கு முத்தமழை - மெட்ரோ ரயிலில் அதிர்ச்சி

 
de

வாலிபரின் மடியில் அந்த இளம் பெண் வசதியாக படுத்துக்கொள்ள முத்த மழை பெய்கிறார் அந்த வாலிபர்.  இது ஆள் நடமாட்டம் இல்லாத இடமோ,  இல்லை லாட்ஜ் அறையோ இல்லை.  பலரும் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் வீடியோ எடுத்து பரப்ப அது வைரல் ஆகி வருகிறது.  பலரும் கண்டனம் தெரிவித்து  வருகின்றனர்.

dl

 டெல்லி மெட்ரோ ரயிலில் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து வரும் பயணிகளால்,  ஆபாசமாக நடந்து வரும் பயணிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.  உள்ளாடையுடன் பெண்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்ததை சிலர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி வந்த நிலையில் , மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் மெட்ரோ நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்து இருந்தது .

இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் பலரும் இருக்கையில் அமர்ந்திருக்க,  இடம் இல்லாதவர்கள் கீழே அமர்ந்து உள்ளார்கள்.  அப்படி கீழே அமர்ந்திருக்கும் போது வாலிபரின் மடியில் அந்த இளம் பெண் படுத்துக் கொள்கிறார்.  அந்த இளம் பெண் வசதியாக படுத்துக் கொள்ளவும்,  அந்த இளைஞர் தொடர்ந்து முத்த மழை பெய்து கொண்டே இருக்கிறார்.

 இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  சிலர் ஆத்திரமடைந்து அந்த நிகழ்வை வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர் . அந்த வீடியோ வைரலாகி ,  ‘வெட்கமற்றவர்கள்’ என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 தேசிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் கவனத்திற்கு செல்லவும்,  அவர் இது குறித்து டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதன் பின்னர் மீண்டும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்,  மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  அப்படி பொறுப்புடன் நடந்து கொள்ளாதவர்கள் பற்றி ஹெல்ப் லைன் மூலம் உடனே புகார் தெரிவிக்கலாம்  .  சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறது.