உடல் ரீதியாக 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - டியூசன் நிர்வாகி சிறையிலடைப்பு
எட்டாம் வகுப்பு மாணவிக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் டியூசன் நிர்வாகி. பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அதைச் சொல்லி அழுது இருக்கிறார் இதை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .
புதுச்சேரி மாநிலத்தில் மாகி பிராந்தியத்தில் பாரதியார் சாலையில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். 54 வயதான இவர் தனது வீட்டிலும் கேரளா மாநிலம் தலச்சேரியிலும் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இவரின் டியூசன் சென்டரில் அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று அந்த மாணவி இடம் உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார் ராதாகிருஷ்ணன். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டிற்கு சென்றதும் தனக்கு நேர்ந்தது குறித்து தாயிடம் சொல்லி அழுது இருக்கிறார்.
இதை அடுத்து அந்த தாய் குழந்தைகள் நல குழுவிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். இது குறித்து மாணவியிடம் குழந்தைகள் நல குழு விசாரணை நடத்திய போது ராதாகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி இருக்கிறது. இதன் பின்னர் மாகி போலீசாரிடம் குழந்தைகள் நல குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.