"ரெண்டு பேரு ஒரே பெண்ணை ...."நடுரோட்டில் நண்பர்களால் நேர்ந்த விபரீதம்
ரெண்டு பேரு ஒரே பெண்ணை காதலித்ததால் இருவரும் நடுரோட்டில் கத்தியால் குத்தி கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் நடந்துள்ளது
தமிழகத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சந்தோஷ்குமாரும் அதே பகுதியில் வசிக்கும் சரண் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் .இந்த இருவரும் அங்குள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில் அதே பகுதியில் ஒரு இளம் பெண் வசித்து வந்தார் ,அந்த பெண்ணை முதலில் சந்தோஷ் குமார் காதலித்தார் .ஆனால் அவரின் நண்பர் சரணுக்கு இந்த காதல் விவகாரம் தெரியாது .இந்நிலையில் அந்த சரணும் அவர் காதலிக்கும் பெண்ணை காதலித்தார். இருவரும் குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் தங்களது காதலை கூறியதும் ,அந்த பெண் அவர்களிடம் இது பற்றி கூறிவிட்டார் .அதனால் அவர்களில் யாரை காதலிப்பது என்று தெரியாமல் முடிவை அவர்களிடமே விட்டு விட்டார்
இதனால் அந்த சந்தோஷ் குமார் அவரின் நண்பர் சரனிடம் தான் காதலிக்கும் பெண்ணை காதலிக்க வேண்டாம் என்று கூறி ,தன் காதலியை மறந்து விடுமாறு கூறினார் .ஆனால் அதற்கு சரண் சம்மதிக்காததால் இருவரும் நடுரோட்டிலேயே கட்டி புரண்டு சண்டை போட்டனர் .இதில் சரண் ஒரு கத்தியால் சந்தோஷ்குமாரை குத்தினார்
. இதில் காயம் அடைந்த சந்தோஷ்குமார், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் சரணை கைது செய்ய தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.