"நான் கெடுக்கும் போது நீ படம் எடு ,நீ கெடுக்கும் போது நான் .."பெண்ணை பங்கு போட்ட இருவர்

 
rape

தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Greater Noida Dalit girl rape

நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் ஒரு 17 வயதான தலித் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அவர் சில மாதங்களுக்கு முன்பு தனியாக சொந்த வேலை விஷயமாக வெளியே போய் விட்டு வந்தார் .
அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த  இரண்டு வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர் .பின்னர் ஒரு தனிமையான இடம் வந்ததும அந்த பெண்ணை இருவரும் பலாத்காரம் செய்தனர் .அப்போது ஒருவர் கெடுக்கும்போது இன்னொருவர் அதை படம் பிடித்தார் .மற்றவர் கெடுக்கும் போது அதை இன்னொரு வாலிபர் படம் பிடித்தார் .பிறகு  அவர்கள் இருவரும் அந்த பெண்ணை விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர் .ஆனால் அந்த பெண் உயிர் பிழைத்து  விட்டார் .அதன் பிறகு அந்த வாலிபர்கள் அந்த பெண்ணிடம் அந்த பலாத்கார வீடியோவை காண்பித்து ,இந்த விஷயத்தை  வெளியே சொன்னால் இந்த வீடியோ இணையத்தில் வந்து விடும் என்று கொலை மிரட்டல் விடுத்தனர் .
அதனால் அந்த பெண் இதை சொல்லாமல்  இருந்தார் .ஆனால் சில மாதங்களுக்கு பிறகு அந்த பெண் கர்ப்பிணியானார் அதனால் அவரின் வீட்டில் விஷயம் தெரிந்து கேட்ட போது  அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூரினார் .பின்னர் அவர்கள் போலீசில் புகார்  தந்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.