"துணியில்லாத பெண்களுடன் தூணில் கட்டி வைத்து ...."இரு வாலிபர்களுக்கு வலைவீசி நடந்த கொடுமை.

 
girl rapes and murder


இரு வாலிபர்களை கடத்தி ஒரு இளம் பெண்ணோடு ஆபாச படமெடுத்து பணம் பறித்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் .

Meerut crime

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்கௌடா பகுதியில் வசிக்கும் சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ் என்ற இரண்டு வாலிபர்கள் வசித்து வந்தனர் .அவர்கள் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் .இதையறிந்த ஒரு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, லோஹியாநகர் மண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அவர்களுக்கு பார்ட்டி கொடுப்பதாக ஆசை காமித்து வரவைத்தனர் .அப்போது அங்கு ஒரு இளம் பெண்ணும் ஆறு வாலிபர்களும் இருந்தனர் .
பின்னர் அந்த சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ்  ஆகியோரை அங்கிருந்த அந்த இளம்பெண்ணொடு உடைகளை உருவி ஒரு தூணில் கட்டி வைத்தனர் .பிறகு அந்த பெண்ணோடு உடையில்லாமல் இருப்பது போல் படமெடுத்தனர் .பின்னர் அந்த வீடியோவை அவர்களிடம் காண்பித்து அதை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டனர் .ஆனால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறியதும் ,அவர்களிடமிருந்த 32000 ரூபாய் பணத்தை பறித்து கொண்டார்கள் .மேலும் அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் பறித்து கொண்டு துரத்தி விட்டார்கள் .இதனால் அந்த சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ்  ஆகியோர் அங்குள்ள போலீசில் அந்த ஆறுபேர் மற்றும் ஒரு பெண் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர் .ஆனால்  இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களை போலீஸார் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.