"உடலுறவுக்குப் பின் உடையின்றி வீசப்பட்ட பெண்களின் உடல்கள்" -உறைய வைக்கும் உக்ரைன் போட்டோக்கள்

 
ukarain

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் எந்த அளவுக்கு கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை காட்டும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி பலரின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது .

Image

உக்ரைனில் ரஷியா படையெடுத்து சென்று ,அங்கு பல ஆக்கிரமங்களை 40 நாட்களுக்கும் மேலாக அரங்கேற்றி வருகிறது .அங்கு பல பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்து அவர்களின் உடல்களை வீசி விட்டு செல்கின்றனர் .மேலும் பிணங்களை கூட மனித வெடிகுண்டாக பயன்படுத்தி வரும் கொடூரம் அரங்கேறி வருகிறது  

அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள புறநகர் பகுதிகளில் உடலுறவு கொள்ளப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட  பெண்கள் மற்றும் ஆண்களின் சடலமாக நிர்வாண நிலையில் ஒரு பாலிதீன் கோணியில்  போடப்பட்டு எடுத்து செல்லப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ
அவர் ட்விட்டரில்  'இது  போர்க்குற்றம் நடந்ததற்கான சாட்சி புகைப்படம். அதில் நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடல்கள் தான் இவை என்றார் .மேலும்  ரஷ்யவீரர்கள் அவர்களின் உடல்களில் டாட்டூக்கள்  அடையாளங்கள் இருந்ததா என தேடியும் சோதித்தும் பார்த்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் ரஷ்யாவின்  தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்படுபவர்களை நினைத்து அவர்களின் உறவினர்களும் நண்பர்களும்  கதறி அழுவதை வெளியிட்டுள்ளார்.