நடுக்காட்டில் சிறுமிக்கு நடந்த கொடுமை! வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
நடுக்காட்டில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது . ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிக்கு இந்த தண்டனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம் .
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற 42 வயது வாலிபர், கோவை மாவட்டத்தில் அன்னூர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் வாசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி நடுக்காட்டிற்கு அழைத்துச் சென்று இங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இது குறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார். பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் தங்கராஜ் மீது போக்சசோ சட்டத்தின் கீழ் வாக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கில் விசாரணைகளை முடிந்து நீதிபதி, குற்றவாளி தங்கராஜ் 10 ஆண்டுகள் சிறையில் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கோவை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கின் விசாரணைகள் முழுவதும் முடிவு அடைந்து குற்றவாளி தங்கராஜ் மீது உறுதியாகி இருக்கிறது.
நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை முடிவடைந்து தங்கராஜ்க்கு பத்தாண்டுகள் சிறை தண்டனையும் 20,000 ரூபய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி இந்த வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த புலன் விசாரணை அதிகாரி , சாட்சியங்களை சிறப்பாக ஆஜர்படுத்தியதற்காக. நீதிமன்ற காவலர் பரசுராமன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.