"டேய் நான் உன் பொண்டாட்டியா , கண்ட நேரத்துல கதவை தட்டுறே" -காண்டான விதவைக்கு நேர்ந்த விபரீதம்

 
love


கல்யாணம் செய்ய மறுத்த கள்ள காதலனால் ஒரு விதவை பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார் 

Woman ended her life in Tamil Nadu [Representative image]
தமிழகத்தின் திருப்பூரில் உள்ள கே.வி.ஆர்.நகரில் திருநெல்வேலியைச் சேர்ந்த 45 வயதான தெய்வானை என்ற பெண் வசித்து வந்தார் .இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .அதன் பின் அந்த பெண் ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போனார் .அப்போது அவருக்கு அங்கு ஏற்கனவே கல்யாணம் ஆன ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது .
இதனால் அந்த வாலிபர் பல ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார் .அதன் பின்னர் அந்த பெண்ணை பற்றி ஊரார் அவதூறாக பேசியதால் ,அவர் அந்த வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்  .ஆனால் அந்த வாலிபர்  மறுத்து விட்டு ,மீண்டும் அந்த பெண்ணிடம் கண்ட நேரத்தில் வந்து தொல்லை படுத்தினார் .இதனால் அந்த பெண் அவரிடம் தன்னை திருமணம் செய்யாமல் இங்கு வரக்கூடாது என்று திட்டியதும் அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியதும் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர் 
பிறகு  அந்த பெண் அங்கிருந்த கெரோசினை எடுத்து தன்  மீது கொட்டி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் .தெய்வானை தீக்குளித்துக்கொண்டதை காட்டும் சிசிடிவி காட்சிகள் சைபர்ஸ்பேஸில் வைரலாக பரவியது. தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.