"கள்ள காதலனோடு கட்டிலிலிருக்க விடமாட்றாரே.." -தவறான உறவை தட்டி கேட்ட தந்தைக்கு நேர்ந்த கதி
மகளின் கள்ளக்காதலை தட்டி கேட்ட தந்தையை குடும்பத்தினரே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது
தமிழகத்தின் ராமநாதபுரம் அருகேயுள்ள ஆசாரிமடத்தை சேர்ந்த 56 வயதான ரவி லாரி டிரைவராக இருக்கிறார் . இவருக்கு 54 வயதில் பாக்கியம் என்ற மனைவியும் .26 வயதில் பவித்ரா என்ற மகளும் இருக்கின்றனர் ,.மகள் பவித்ரா திருமணமாகி கணவரை பிரிந்து,குழந்தைகளுடன் பெற்றோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் அந்த பவித்ராவுக்கு இடையர் வலசை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் கள்ள காதல் ஏற்பட்டதால் ,இருவரும் அடிக்கடி அந்த வீட்டில் உல்லாசமாக இருந்தனர் .இதை ஒரு நாள் அந்த பெண்ணின் தந்தை ரவி பார்த்து விட்டு ,மகளையும் உடந்தையாக இருந்த மனைவியையும் குடித்து விட்டு வந்து கண்டித்துள்ளார்
இதனையடுத்து மார்ச் 8ல் ரவி போதையில் துாங்கும்போது படுக்கையில் பெட்ரோல் ஊற்றி அவரின் மகள் பவித்ரா, மனைவி பாக்கியம் ,மற்றும் கள்ள காதலன் முருகானந்தம் ஆகியோர் தீ வைத்து கொளுத்தி கொன்றுவிட்டனர் .இந்த கொலை பற்றி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் பாக்கியம், முருகானந்த்தை கைது செய்துள்ளனர். பிறகு பவித்ராவை கைது செய்ய உள்ளதாக போலீசார் கூறினர்.