"மகள் பிடிக்க ,மனைவி அடிக்க ,கணவர் துடிக்க......"குடும்பத்தினரே கொலை செய்யுற அளவுக்கு அவர் என்னதான் செஞ்சாரு ?

 
murder

சொத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்காததால் கணவரை கொன்று  நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர் .

murder

கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா மரேவாடா கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான ஈரப்பா ,தன்னுடைய 40 வயதான  மனைவி ஷோபா மற்றும்  2 மகள்களுடன் வசித்து வந்தார் . அந்த மனைவி ஷோபா, தார்வார் தாலுகாவில் ஒரு அரசியல் கட்சியின் மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சொத்துக்கள் எல்லாம் அந்த ஷோபாவின் கணவர் ஈரப்பாவின் பெயரில் உள்ளதால் ,அவர் குடும்பத்தினரின் ஆடம்பர செலவுக்கு சொத்துக்களை விற்க முடியாது என்றார் .இதனால் அந்த மனைவியும் அவரின் மகள்களும் அவரிடம் சொத்துக்களை தங்களின் பெயரில் மாற்றி கொடுக்கும்படி கேட்டு வந்தனர் .
ஆனால் ஈர்ப்பா  அதற்கு மறுக்கவே ,கடந்த வாரம் ஒரு நாள் இரவு அந்த கணவரை அந்த மனைவி ஒரு கட்டையால் அடிக்க ,அப்போது அவரின் மகள்கள் அவர் எங்கும் தப்பிக்காதபடி பிடித்துக்கொண்டனர் .பிறகு அவர்களின் தாக்குதலால்  அந்த ஈரப்பா அதே இடத்தில் இறந்து போனார் .
பின்னர் அந்த பெண் தன் கணவர் விபத்தில் இறந்து விட்டதாக போலீசில் புகார் கூறினார் ,ஆனால் போலீசார் அதை நம்பாமல் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அந்த ஈர்ப்பவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்  
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபா மற்றும் அவரது 2 மகள்களையும் கைது செய்தனர்.