"கணவனின் கல்லீரலை காலி பண்ணி .."கள்ள காதலால் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற கொடூரம்

 
liver

கள்ள காதலனோடு சேர்ந்த கணவனுக்கு ஸ்லோ பாய்சன் வைத்து கொன்ற மாணவி மற்றும் காதலனை போலீஸ் கைது செய்தது 

love
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான தேவேந்திரன் கவுன்சிலராக இருக்கிறார் . 
இவர் சூர்யா என்ற ஏழை வீட்டு பெண்ணை  அவர் வீட்டின் ஏழ்மையை பயன்படுத்தி தேவேந்திரனின் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். . பிறகு வீட்டில் வேலைக்கு சேர்ந்த சந்திரசேகரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் தேவேந்திரனுக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தேவேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். உடனே கொலை செய்து விட்டால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், தேவேந்திரன் சாப்பிடும்போது, சாம்பாரில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்து உடலில் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படும் வகையில் விஷம் கொடுத்துள்ளனர்.

இதனால் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தும், உடலை அவசர அவசரமாக தகனம் செய்ததும் தெரியவந்தது என தெரிவித்தனர்.  இதுகுறித்து இறந்தவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.