"எய்ட்சுடன் வந்த என்ஜினீயரால எனக்கும் எய்ட்ஸ்" -புகாரளித்த பெண்ணால் பரபரப்பு
‘எய்ட்ஸ்’ இருப்பதை மறைத்து திருமணம் செய்து , கொடுமைப்படுத்துவதாக கணவன் போலீசில் மனைவி பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு பசவனகுடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு 30 வயதான ஒரு என்ஜினியருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவரும் ஹனி மூன் சென்றபோது அந்த கணவர் அந்த பெண்ணிடம் ஏதேதோ கரணம் சொல்லி உறவு வைக்காமல் வந்து விட்டார் .ஆனாலும் அந்த பெண் அவருடன் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார் .அப்போது அந்த கணவர் அந்த பெண்ணை வரதட்சணை கொடுமையும் செய்துள்ளார் .அப்போதும் அந்த பெண் அவரை விட்டு விலகாமல் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் அந்த கணவர் வெளியூர் சென்ற போது அவரின் மெடிக்கல் ரிப்போர்ட்டை அந்த பெண் எடுத்து பார்த்தபோது அவருக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் .ஆனால் அந்த கணவர் இதை அவரிடம் மறைத்து வாழ்ந்து வந்ததால் இப்போது அந்த மனைவிக்கும் எய்ட்ஸ் வந்துவிட்டதாக அவர் போலீசில் புகார் கூறியுள்ளார் .மேலும் தன்னை கொடுமைப்படுத்திய கணவரை கைது செய்யுமாறும் அவர் புகாரில் கூறியதில் ,போலீசார் அந்த என்ஜினீயர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்