"பதினாறு வயசு மகளையும் கூட்டிட்டு ஓடிட்டியே" -மனைவியின் கள்ளக்காதலால் கதறும் கணவன்
16 வயது மகளுடன் மாயமான பெண் ,தன் கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
தமிழகத்தின் கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 45 வயதான நபர் தனது 40 வயதான மனைவி மற்றும் 16 வயதான மகளுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவர் அடிக்கடி வேலைக்காக வெளியூர் சென்று விடுவார் .இதற்கிடையே அந்த மனைவி அடிக்கடி அங்குள்ள ஒரு கோவிலுக்கு செல்வார் .அப்போது களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஒரு 29 வயதான வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது .
அதனால் இருவரும் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து வந்தனர் .பின்னர் அந்த பெண் அந்த வாலிபருடன் ஊரை விட்டு போக முடிவு செய்தார் .அப்போது தனது 16 வயது மகளை தன் கணவரிடம் விட்டு செல்லாமல் ,தன் காதலன் வீட்டிற்கே அவரையும் கூட்டி சென்றார் .பின்னர் மனைவியையும் மகளையும் காணாத அந்த கணவர் போலீசில் புகார் தந்தார் .போலீசார் அவர்களை கேரளாவில் கண்டுபிடித்து ,அந்த கணவரையும் அங்கு வரவைத்து போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து செய்தனர் .அப்போது அந்த பெண் தன் கணவரோடு செல்ல விருப்பமில்லை என்றார் .ஆனால் காதலனுடன் போலீசார் அவரை அனுப்ப மறுத்து விட்டனர் .இதனால் அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். .