"இறந்த மனைவியால், தற்கொலை செய்த கணவன்" -அனாதையான குழந்தைகள் -அந்த குடும்பத்தில் என்னதான் பிரச்சினை ?

 
family


மாத்திரை சாப்பிட்டு  மனைவி உயிரிழந்ததால் , அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகள் அனாதையாகியுள்ளது 

suicide
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மகேஷ் தன்னுடைய இளம் மனைவி காயத்ரியுடன் வசித்து வந்தார் . இந்த தம்பதிகளுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அந்த மகேஷின் மனைவி காயத்ரிக்கு இரத்த அழுத்த கோளாறு இருந்துள்ளது ,இதனால் அவர் தினமும் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார் .ஒரு நாள் அவர் பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த மருந்துகளுக்கு பதிலாக தவறான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
அந்த இளம் மனைவி உயிரிழந்ததில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த கணவர் மகேஷ், பல முறை தற்கொலைக்கு முயன்றபோது உறவினரால் காப்பாற்றப்பட்டுளார் 
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விஷம் குடித்த மகேஷ், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் தனது சகோதரருக்கு போன் செய்து , தனது இரண்டு குழந்தைகளும் அனாதையாகாமல் பார்த்து கொள்ளுமாறு கூறினார் .அவரின் சடலத்தினை பார்த்து அவரின் குழந்தைகள் அழுதது சோகத்தை வரவைத்தது 
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.