"இவரால் இனி இல்லற வாழ்வில் இன்பமே இருக்காதே" -அடுத்து மப்புல இருந்த கணவருக்கு மனைவியால் நடந்த விபரீதம் .
கணவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் தென்காசி சிவகிரி மேலவீதி 2-ம் தெருவைச் சேர்ந்த 38 வயதான துரைக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
அந்த துரைக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் அந்த துரை தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டார் .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துரை அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து விட்டு, ஊருக்கு மேற்கே உள்ள வனத்துறை அலுவலகம் அருகே கிடந்தார். இதை அறிந்த முத்துமாரி அந்த இடத்திற்கு சென்று தான் பாட்டிலில் மறைத்து வைத்து இருந்த பெட்ரோல், மண்எண்ணெய் ஆகியவற்றை தனது கணவர் என்றும் பாராமல் அவர் மீது ஊற்றி, தீவைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிறகு பொது மக்கள் மூலம் ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து,அவரின் மனைவி முத்துமாரியை கைது செய்தனர்.