"யோவ் என் புருஷன் பார்த்துட்டான் ,எந்திரியா... "கத்திய மனைவி -அடுத்து கள்ள காதல் தகராறில் என்னாச்சி பாருங்க .

 
affair

கள்ள காதலனோடு மனைவி இருப்பதை பார்த்து விட்ட கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி மற்றும் அவரின் காதலனை போலீஸ் கைது செய்தது 

affair
பீகாரில் உள்ள  பூர்னியாவின் சகர்படா கிராமத்தில் போஷித் குமார் என்பவர்  தனது மனைவி தேவியோடு வசித்து வந்தார் .இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில் ,இரண்டு குழந்தைகள் உள்ளன.அந்த தேவி,  அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் மஹால்தாருடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு கொண்டிருந்தார்.இருவரும் அந்த கணவர் குமாருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர் .
இந்நிலையில் அந்த தேவியும் அந்த காதலனும் ஒரு நாள் உல்லாசமாக இருப்பதை அந்த கணவர் குமார் பார்த்து விட்டார் .
அப்போது அந்த மனைவி தேவி அந்த காதலனிடம் 'என் புருஷன் பார்த்துட்டார் ,அவரை உயிரோடு விட்டால் நமக்கு ஆபத்து ,அதனால் நாம் இருவரும் சேர்ந்து அவரை கொன்று விடலாம்' என்று ஐடியா கொடுத்தார் .உடனே இருவரும் ஒரு கயிறை எடுத்து அந்த கணவர் குமாரின் கழுத்தில் வைத்து நெரித்து கொலை செய்து விட்டனர் .பின்னர் போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கள்ள காதல் தகறாரில் அவரை அவரின் மனைவி தேவியும் காதலனும் சேர்ந்து கொன்றதை கன்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்