14 வயதில் காதல்... 16 வயதில் திருமணம்... 20 வயதில் காதலனுக்காக கணவனை கொன்ற ஒத்த ரோசா

 
ச் ச்

ஓசூரில் மனைவி உடனான கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்த சூரியா(23)- முத்துலட்சுமி(20) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (25) என்பவருடன் முத்துலட்சுமிக்கு திருமணமாகி இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துலட்சுமிக்கு திருமணமானபோதும் காதலன் சூர்யா (23) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் சரவணனுக்கு தெரிய வந்ததால் அவர் முத்துலட்சுமியையும் சூர்யாவையும் பலமுறை கண்டித்துள்ளார். முத்துலட்சுமியை கணவன் கண்டிப்பதை கள்ளக்காதலன் சூரியாவிடமும் அடிக்கடி கூறி வந்ததாக சொல்லப்படுகிறது

இந்த நிலையில் நேற்று  இரவு கஞ்சா போதையில் சரவணன் மனைவி முத்துலட்சுமி கள்ளக்காதல் குறித்து கேள்வி கேட்டு நீண்டநேரம் சண்டையிட்டதாக கூறப்படும் நிலையில், இதுக்குறித்து முத்துலட்சுமி, கள்ளக்காதலன் சூர்யா என்பவருக்கு போனில் கணவன் தொந்தரவு செய்வதை குறித்து தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த சூரியா அவரது நண்பர் சக்தி (20) ஆகிய இருவரும் ஒசூர் பார்வதி நகரில் உள்ள சரவணன் வீட்டுக்கு சென்று, வீட்டில் உறங்கி கொண்டிருந்த  சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் தாய் ஆகியோர் அலறி துடித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் நகர போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக  முத்துலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சுற்றி திரிந்த சூர்யாவை பிடித்து  விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சூர்யாவின் நண்பர் சக்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.