"என் புருஷனை போட்டு தள்ளிட்டேன் சார்" -பிணத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண் .
கள்ளகாதலை கண்டித்த கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியையும் காதலரையும் போலீஸ் கைது செய்தது
மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் கடாரா ஹில்ஸ் பகுதியில் 34 வயதான சங்கீதா மீனா என்ற மனைவியுடன் 40 வயதான தன்ராஜ் மீனா என்ற கணவர் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த சங்கீதாவுக்கு சாகர் கோல்டன் பார்க் காலனியில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியரான பாண்டே என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதனால் இருவரும் அந்த தன்ராஜுக்கு தெரியாமல் ரகசியமாக அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர் .
இந்நிலையில் அந்த கணவனுக்கு இந்த கள்ள காதல் விவகாரம் தெரிய வந்தது .அதனால் அந்த கணவர் தன்ராஜ் அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டு ,அவரின் கள்ள காதலை விடுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் காதலை கை விடாமல் அந்த காதலனுடன் சேர்ந்து அந்த கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார் .அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தன் கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார் .பிறகு அந்த காதலன் பாண்டேவுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து .பிணத்துடன் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்தார் .போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு அந்த பெண்ணையும் அவரின் காதலரையும் கைது செய்தனர் .