"தண்ணீர் தொட்டியில் கிடந்த குழந்தை" -சிசிடிவியில் பதிவான பெண்ணின் அதிர்ச்சி செயல்
பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீஸ் கைது செய்தது
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கலாசௌக்கியின் ஃபெர்பண்டர் பகுதியில் உள்ள சங்கர்ஷ் சதன் கட்டிடத்தில் வசிக்கும் ஒரு பெண் கடந்த 2011 ம் ஆண்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த பெண் தனது மாமியார் மற்றும் கணவரோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த 2013ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார் .அதன் பிறகு அந்த மாமியார் மற்றும் கணவருக்கு அடுத்து அந்த பெண் ஒரு ஆண் வாரிசை பெற்று கொடுக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்தனர் .
அதனால் அந்த பெண் அடுத்தடுத்து பலமுறை கருவுற்றாலும் ,அவருக்கு உருவானது பெண் கரு என்று அவரின் மாமியார் ஏதோ மந்திரம் மூலம் கண்டறிந்ததாக கூறி, அந்த கருவையெல்லாம் கலைத்து விட்டார் .இதையும் மீறி அந்த பெண் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றார் .
அதனால் அவரின் மாமியார் மற்றும் கணவர் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி அவரை தனியாக வசிக்க அனுப்பி விட்டணர் .பின்னர் அந்த பெண் அவரின் பெற்றோரோடு வசித்தார் .இந்நிலையில் பெண் குழந்தையால் மனம் வெறுத்த அந்த அப்பெண் அந்த மூன்று மாத குழந்தையை அங்கிருந்து தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றார் .பிறகு அவர் தன் குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக போலீஸிடம் கூறினார் .ஆனால் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்து அந்த பெண் தன் குழந்தையை கொன்றதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர் .