"சார் என் பொண்டாட்டிய பெர்மெனெண்டா வச்சிக்கிட்டு ...."ஒரு புருஷன் செஞ்ச வேலைய பாருங்க

 
marriage

தனது  மனைவியை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Photo for representation

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது டீனேஜ் வாலிபருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. ஆகஸ்ட் மாதம் அந்த தம்பதியினர் ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அப்போது அந்த கணவனுக்கு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசை வந்துள்ளது .அதனால் ஆடம்பர செலவுக்கு என்ன செய்யலாம்  என்று யோசித்த போது ,பக்கத்திலிருக்கும் அழகான புது மனைவியை பார்த்தார் .உடனே அந்த மனைவியை விற்று பணம் ஈட்ட முடிவு செய்தார் .அதனால் அந்த வாலிபர்  அந்த செங்கல் சூளைக்கு அருகில் வசித்த ஒரு 55 வயதான நபரிடம் தன்னுடைய மனைவியை வைத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டார் 
அதை கேட்டு சந்தோஷமான  பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது நபர்  அந்த வாலிபரின்  மனைவியை ரூ.1.8 லட்சத்திற்கு வாங்கி கொண்டார் .
பிறகு அந்த வாலிபர் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு,புது செல்போன் வாங்கி வைத்து கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தார் .பின்னர் அவரின் குடும்பத்தினர் மனைவி எங்கே என்று கேட்ட போது ,அவர் தன்னை விட்டு ஓடி விட்டார் என்று கூறினார் .அதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசில் புகார் தந்தனர் 
 அந்த புகாரின் பேரில் பாலங்கீரிலிருந்து ராஜஸ்தானுக்கு போலீசார் சென்று அந்த வாலிபரின் மனைவியை மீட்டனர் .பின்னர் அந்த  கணவன் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.