"ஐயோ ! உன்னோட உடலுறவு கொண்டதும் குழந்தை உண்டாயிருச்சே.." -அடுத்து அந்த பெண் செஞ்ச கேவலம்
கள்ளக்காதலனுடன் உறவு கொண்டதால் உண்டான குழந்தையை பெற்றெடுத்து அந்த குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு விற்ற தாய், தரகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் சென்னையில் உள்ள பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியை சேர்ந்த 29 வயதான உதயா தனது கணவர் மணிகண்டன் என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தார்
இந்த நிலையில், அப்பெண் உதயாவுக்கு பாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவர் மூலம் ஒரு கரு உண்டானதும் ,அவர் அதை வைத்து ஒரு திட்டம் போட்டார் ,அதன் படி அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்ததும் ,அந்த குழந்தையை அவர் தன் தோழியான ஆலந்தூரை சேர்ந்த ஜான்சிராணி மூலம் ஈரோட்டை சேர்ந்த சவிதா என்ற பெண்ணுக்கு 1.5 லட்சத்துக்கு விற்றார்
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்ததும் காவல் துறையினர் ஈரோடுக்கு விரைந்து சென்று அங்கிருந்த சவீதாவிடம் இருந்து ஆண் குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக பிறந்த குழந்தையை விற்றதாக தாய் உதயா மற்றும் தரகராக செயல்பட்ட ஜான்சிராணி மற்றும் சவீதா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.