"என்னை நல்லா உல்லாசம் அனுபவிச்சிட்டு இப்படி தில்லாயிருக்கியே" -நடுரோட்டில் பெண்ணிடம் சிக்கிய வாலிபரின் கதி
இளம்பெண்ணிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா தொட்டகட்டே கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதான விஸ்வநாத் . இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதன் பிறகு அந்த பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,அவரை காதலிப்பதாகவும் ,அவரில்லாமல் தன்னால் வாழ முடியவில்லை என்றும் கூறினார் .
அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த பெண் அவரை நம்பி காதலிக்க ஆரம்பித்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை பல இடங்களுக்கு கூட்டி சென்று பலமுறை உல்லாசம் அனுபவித்தார் .அதன் பிறகு அந்த பெண் மீது அவரின் மோகம் தீர்ந்ததும் அவரை விட்டு விலகி ஓடினார் .அந்த பெண் அவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை .அதனால் அந்த பெண் அவரை தேடி கொண்டிருந்தார் .ஒரு நாள் அவர் நடுரோட்டில் அந்த பெண்ணிடம் சிக்கிய போது ,அவரை அந்த பெண் திட்டி விட்டு அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து அந்த விஷ்வநாத்தை தேடி வருகின்றனர்